Tuesday 1 May 2012


தொழுகையின் சிறப்பும் ! தப்லீக் தஃலீம் தொகுப்பும் !




தொழுகையானது இஸ்லாத்தின் இரண்டாவது தூணாகும். இதை விட்டவனுக்கும் இஸ்லாத்துக்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை என்பதும் நபிமொழியாகும். தப்லீக் தஃலீம் தொகுப்பில் தொழுகைக்காக ஒரு தனிப் பகுதியே ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் தொழுகையின் சிறப்புகள், அதனால் கிடைக்கும் நன்மைகள், விடுவதால் ஏற்படும் தண்டணைகள் பற்றியெல்லாம் விலாவாரி
யாக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் நபியவர்கள் தொழுகையின் சிறப்புகளைக் கூறியது போல, தொழாதவர்களுக்குரிய தண்டணைகள் பற்றிக் கூறியது போல, எவ்வாறு தொழவேண்டுமெனவும் கூறினார்களா இல்லையா? அப்படியாயின் நபி வழிப்படி தொழும் முறையோ, தொழுகையின் சட்ட திட்டங்களோ ஏன் தப்லீக்கில் போதிக்கப்படுவதில்லை ?.

உதாரணமாக ஒரு பாடசாலையில் கம்யூட்டர் கல்வியின் சிறப்பு அதன் முக்கியத்துவம் பற்றி மாத்திரம் போதிக்கப்படுகின்றது கம்யூட்டர்க் கல்வி போதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இந்தக் கல்வியால் மாணவர்களுக்குக் கிடைக்கும் பயன் யாது ? பூச்சியம் தான் மிச்சம். இதுதான் இன்று தப்லீக்கிலும் நடந்து கொண்டிருக்கின்றது. நபி வழிப்படி தொழும் முறை பற்றி அதன் சட்டதிட்டங்கள் பற்றி, தொழுகையில் ஓத வேண்டியவை, வுழூ, தொழுகையின் பர்ழு ஷர்த்து, சுன்னத்துக்கள், தொழுகையை முறிப்பவைகள் பற்றியெல்லாம் ஏராளமான ஹதீஸ்களும் சட்டதிட்டங்களும் உள்ளன. இவை தஃலீம் தொகுப்பில் மருந்துக்கேனும் உண்டா ?. இல்லை தப்லீக் முக்கியஸ்த்தர்களுக்கேனும் தெரியுமா ?

அவர்களாவது 40 நாள் உடல் பொருள், தொழிலைத் தியாகம் செய்து தப்லீக்கில் வெளிக் கிளம்பும் அப்பாவிக்கார்க்கூன்களுக்கு அன்றாட மஸூராவில் ஒரு நேரம் ஒதுக்கிக் கற்றுக் கொடுக்கின்றார்களா? ஓவ்வொரு நாளும் தஃலீம் வாசிக்க 6-7 மணிநேரங்கள் ஒதுக்கப்படுகின்றதே. நபியவர்கள் சொல்லித்தந்த சட்டதிட்டங்கள் பற்றிக் கற்பிக்க அரைமணி நேரமாவது ஒதுக்கப்படுகின்றதா? இல்லையே? அன்பின் கார்க்கூன்களே! நீங்கள் எவ்வளவு தடவைகள் வக்தில் வெளிக்கிளம்பியுள்ளீர்கள். மார்க்க சட்ட திட்டங்கள் பற்றி எந்தளவுக்கு நீங்கள் தப்லீக்கில் சென்று கற்றுக் கொண்டீர்கள் என்று உங்கள் இதயத்தில் கை வைத்துச் சொல்லுங்கள்.

இது பற்றி அவர்களிடம் வினவினால் தயாராக ஒரு பதில் வைத்திருக்கின்றார்கள். ‘பழாயில்களைப் பற்றி தஃலீம் புத்தகத்தில் படிப்பது, மஸாயில்களை (சட்டங்களை) ஆலிம் உலமாக்களை அணுகி கால்மடித்து ஹதிய்யாக்களைக் கொடுத்துப் படித்துக் கொள்வது’ இதுதான் பதில். சரி 40 நாள் 4 மாதம் என்றெல்லாம் நீண்ட காலங்கள் தொழில் துறை, உத்தி யோகம் பொறுப்புக்களைத் துறந்து மக்கள் வெளிக்கிளம்பிச் செல்கின்றார்கள். இதிலாவது தொழுகை பற்றிய இன்னும் மார்க்க சம்பத்தப்பட்ட எந்தநிகழ்ச்சியாவது இடம்பெறுகின்றதா? அங்கும் அதே தஃலீம் அதே அமல்களின் சிறப்பு, சலித்துப் போனால் உசார் படுத்த ஹஜ்ஜின் சிறப்பு ஸதக்காவின் சிறப்பு எனும் பெயரில் இரு நாவல்கள். இதிலே துப்பறியும் கதைகளும், மெய்சிலிர்க்க வைக்கும் கதைகளும் தாராளமாக எவ்வித முகவரியுமில்லாது அவிழ்த்து விடப்படுகின்றன.

இந்தப் பொன்னான நேரத்தை மார்க்க தொழுகை விடயங்களைக் கற்பிப்பதில் செலவிடலாமே என்று சொல்லிப் பாருங்கள். அதற்கும் ஒரு ரெடிமேட் பதில் ‘ஆறு நம்பருக்கு அப்பால் பேசுவது உஸூலுக்கு மாற்றமானது. அதைப் பெரியார்கள் அனுமதிப்பதில்லை. கண்ட கண்ட மௌலவி மார்களிடமெல்லாம் மார்க்கம் கற்கக் கூடாது. பேணுதலான, இந்த ஹக்கான வேலையில் ஊறியவர்களிடத்திலேயே மார்க்கம் படிக்க வேண்டுமென்று’ தத்துவம் பேசுவார்கள். அவர்களிடமாவது கேட்டுப்படிக்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை.

இன்றைக்கு ஒவ்வொரு ஊர் கிராமங்களிலும் கூட 4மாதங்கள் ஒருவருடம் வக்து முடித்தவர்கள் கூட உண்டு. இவர்களிடம் எந்தளவு மார்க்க விடயங்களைத் தேடிப் படித்துள்ளீர்கள், தொழுகை துஆக்கள், அதன் சட்டங்கள், இன்னும் தொழுகை பற்றித் தெரிய வேண்டிய நூற்றுக் கணக்கான சட்டங்கள் உள்ளனவே!! இவற்றில் சிறிதளவாவது தெரியுமா? என்று விசாரித்துப் பாருங்கள். அப்படி ஒரு சிலருக்குத் தெரிந்திருந்தாலும் அது அவரது தனிப்பட்ட முயற்சியால் – ஏனைய இஸ்லாமிய நூல்களைப் படித்ததால் கற்ற விடயங்களாகத்தான் இருக்கும். இதை நீங்கள் ஏற்கத் தயங்கினால் நீங்களே பத்து தப்லீக் கார்க்கூன்களை அழைத்து அவர்களிடத்தில் சில தொழுகையின் சட்டங்களைக் கேட்டுப்பாருங்கள் எத்தனை பேர் சரியான பதில் சொல்கின்றார்கள் என்று பாருங்கள். ??

தப்லீக் பெரியார்கள் மார்க்க சட்டதிட்டங்களைப் பற்றி தமது தப்லீக் கார்க்கூன்களுக்கு கற்றுக் கொடுக்கத் தயங்குவதிலும் ஒரு உண்மை மறைந்திருக்கின்றது. அதாவது டில்லி பெரியார்கள் ஹதீஸின் அடிப்படையிலுள்ள சட்டங்களை ஏற்றுக் கொள்வதில்லை அவர்களது ஹனபி மத்ஹபு நூலிலுள்ள சட்டங்களே இஸ்லாம் என்றும் அதைத்தான் பின்பற்றுவது கடமையென்றும் கூறி நபிவழிச் சட்டங்களை மட்டுமன்றி, ஏனைய மத்ஹபுச் சட்டங்களையும் புறக்கணிப்பவர்கள். எனவே மார்க்க சட்டங்கள் கற்பிப்பதென்றால் ஹனபி மத்ஹபுப் படிதான் கற்பிக்க வேண்டுமென்பதில் இவர்களுக்கு வெறி ஆனால் ஏனைய மத்ஹபுகளைச் சார்ந்த கார்க்கூன்கள், தப்லீக் உலமாக்கள் இதனை ஜீரணிக்க மாட்டார்கள். 

ஆகவே இந்த மத்ஹபுச் சட்டப் பிரச்சினையால் தப்லீக்கின் இயக்க ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தடைப்படலாம் என்ற குறுகிய சுயநல எண்ணத்தாலேயே இவர்கள் ஆறு நம்பருக்கு அப்பால் போய் சட்டதிட்டங்கள் போதிக்கப்படுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். தமது இயக்கத்தை வளர்ப்பதற்காக இஸ்லாத்தின் ஆணிவேரான மார்க்க சட்டங்கள் மக்களுக்குப் போய்ச் சேராமல் தடை வேலி போட்டிருக்கிக்கும் இவர்கள்தான் நபியவர்களை நேசிப்பவர்களா? நபிவழிப்படி வாழ்பவர்களா? சிந்திப்பீர்களாக. .

ஹதீஸ் போதனையா. . கப்ஸா போதனையா ??
-------------------------------------------------------

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் எம்மனைவருக்கும் ஈருலக வழிகாட்டியாக வந்தவர்கள். எமக்குத் தேவையான எவ்விடயத்தையும் அவர்கள் சொல்லித்தராமல் விட்டதில்லை. எனவே ஒரு முஸ்லிம் எப்படித்தொழ வேண்டும் என அறிந்து கொள்ள விரும்பினால் ஹதீஸின் ஒளியில் எவ்வித சந்தேகங்களும் மீதியிருக்காத அளவுக்குத் தெட்டத் தெளிவாக அறிந்து கொள்ளும் அளவுக்கு தொழும் முறை, அதன் சிறப்பு, அதை முறிப்பவை, அதனை விட்டால் கிடைக்கும் தண்டணை இப்படி ஏராளமான நபி மொழிகள் இருக்கின்றன.

ஆனால் தப்லீக் தஃலீம் தொகுப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தொழுகை பற்றிய பகுதியின் ஆரம்பத்தில் மாத்திரம் சில அல்குர்ஆன் வசனங்களும் சில நபி மொழிகளும் இடம் பெறும் அதற்கு அடுத்த கட்டமாக ‘ஒரு ஹதீஸில் வருவதாவது…. ‘ ஒரு அறிவிப்பில் வருவதாவது… ‘ என்ற பெயரில் பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் இடம்பெறும்.

ஜக்கரிய்யா மௌலானாவோ ஹதீஸ்கலை மேதையாகிற்றே. . 20-25 வருடங்கள் புகாரி – முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூற்கள் நடத்தியவர்களாயிற்றே. . புகாரி முஸ்லிமில் தொழுகை பற்றி ஹதீஸ்களே இல்லையா? என்று உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.

உண்மைதான் அதில் வரும் ஹதீஸ்களையெல்லாம் சொன்னால் மக்கள் நபிவழிப்படி தொழ ஆரம்பித்து விடுவார்களே ஹனபி -ஷாபி மத்ஹபின் ஹதீஸூக்கு மாற்றமான சட்டங்களை அலட்சியம் செய்து விடுவார்களே. . அதன் பின்பு எல்லோரும் நபிகளுக்குத்தான் மதிப்பளிப்பார்கள். பெரியார்களுக்கு மதிப்பளிக்க மாட்டார்களே!. நபிவழியைப் படித்துக் கொடுத்தால் இவர்களது திஸ்த் திய்யாத்தரிக்காவிடம் பைஅத் செய்ய எவன் வரப்போகின்றான். ?? 

எனவேதான் தமது நோக்கம் நிறைவேற வேண்டுமென்பதற்காகவே ஆதாரப்பூர்வமான சட்ட சம் பந்தப்பட்ட ஹதீஸ்களைக் கூறுவதைத் திட்டமிட்டுத் தவிர்த்துள்ளார்கள். இவர்களது நோக்கம் பாரரர்களை ஹனபி ஷாபி மத்ஹபுக்குள்ளேயே வைத்துக் கொண்டு – அதை விட்டு வெளி யேற விடாது, இபாதத் எனும் போர்வையிலேயே ஹதீஸ் எனும் பெயரிலேயே பெரியார்களின் வீர தீர சாகசக் கதைகளைக் கூறி பெரியார்கள் மீது குறுட்டுப் பக்தியை உண்டு பண்ணி பின்னர் திஸ்த்திய்யாத் தரீக்காவுக்குள் உள் வாங்கிக் கொள்வதுதான் இவர்களது அந்தரங்க உள் நோக்கம். இதை நீங்கள் இப் போது ஒப்புக்கொள்ளா விட்டாலும் போகக் போக ஏற்றுக் கொள்வீர்கள். . என்னைப் போன்று. ..
______________________________________
ஜசகல்லாஹ் சகோ: Ilmunnisha Nisha

இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வரும் பிரிட்டன் மக்கள் – அதிர்ந்து போயுள்ள கிறித்துவ உலகம்

பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.
இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent” என்ற பிரிட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது.(பார்க்க http://www.independent.co.uk/news/uk/home-news/the-islamification-of-britain-record-numbers-embrace-muslim-faith-2175178.html)
கிறித்துவ உலகத்தின் அடித்தலமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறித்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால் தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில்தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.
2001 – ல் எடுக்கப்பட்ட கணக்கெடுபில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டவர்களின் எண்ணிக்கை 14,000 முதல் 25,000 வரை இருக்கலாம் என கணெக்கடுக்கப்படது, ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளார்கள் என “Faith Matters” என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்று எத்தனை முஸ்லீம்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் கணக்கெடுத்துள்ளனர், அதில் தலைநகர் லண்டனில் மட்டும் 1400 முஸ்லீம்கள் கடந்த ஓராண்டில் பள்ளிவாசல்களில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர், (அமைப்புகள் மூலமாக, தனி நபர் மூலமாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி), இப்படி பிரிட்டன் முழுவதும் பள்ளிவாசல்களில் எடுத்த கண்க்கெடுப்பின் படி 5200 நபர்கள் ஓர் ஆண்டில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்).
பிரான்ஸ் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் எண்ணிக்கை ஆண்டு ஒன்ற்றிக்கு 4000. எனவே “The Independent” நடத்திய இந்த புது ஆய்வின் படி ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டன் மக்கள்தான் இஸ்லாத்தை தழுவுவதில் முன்னனியில் உள்ளனர். இந்த ஆய்வை நடத்திய “Faith Matters” அமைப்பின் இயக்குனர்  கூறுகையில் நாங்கள் இந்த தகவலை பள்ளிவாசலில் திரட்டினோம், முழுவதுமாக எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல, முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை பன்மடங்காக இருக்கும் என தெரிவித்தார் .
ஏன் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இஸ்லாத்தை பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வருகின்றது, இந்த பொய் பிரசாத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர், இந்த ஆய்வில் பலர், இஸ்லாத்தின் உன்னதமிக்க கருத்தினால் ஈர்க்கப்படு, உன்னத பாட்டு போன்ற ஆபாசங்களும், அசிங்கங்களும் நிறைந்த பைபிளை தூக்கி எரிந்துவிட்டு உண்மை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுகொள்கின்றனர்.
இஸ்லாத்தை அறிவு பூர்வமாகவும், ஆதரபூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் எதிர்க்க முடியாத கிறித்தவ உலகம் பொய் பிரச்சாரங்கள் மூலமாக இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முழுவீச்சில் செயல்பட்டுவருகின்றது. பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை ஏற்ற இரண்டு இளைஞர்களை சுட்டுகொன்ற CIA இவர்கள் தீவிரவாதிகள் , பயங்கரவாதிகள் என பத்திரிக்கையில் செய்திகளை பரப்பி மக்களை அச்சமுற செய்கின்றனர், “Faith Matters” ஆய்வில் இங்கிலாந்தில் வரும் செய்திகளில் 32 % செய்திகள் இஸ்லாத்தை தீவிரவாத்தோடு சம்மந்தபடுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.
கிறித்துவர்களிடம் இருப்பது, பொய்களும், ஆபாசங்களும், மனிதனுக்கு உதவாத உலரல்களும் நிறைந்த பைபிள் தான் இந்த பைபிளை வைத்து கொண்டு கிறித்துவகளை தக்கவைக்க முடியாது என்பதை கிறித்தவ மிஷினரிகள் நன்றாக உணர்ந்துள்ளன, பொய்களையும் புரட்டுகளையும் சொல்லி கிறித்துவர்களை ஏமாற்றி கிறித்துவத்தை வாழவைத்து கொண்டிருக்கின்றனர் பாதிரிமார்கள். மேற்கத்திய நாடுகள் போடும் பிச்சை டாலருக்காளுக்காக விவாத வேஷம் போடும் சான்(SAN) போன்ற அமைப்புகள் கூட பைபிள் இறைவேதம் என நிரூபிக்க பைபிளிலிருந்து ஒரு ஆதரத்தையும் காட்ட முடியாமல் கண்டபடி உலறி கொட்டியது.
ஒரு காலத்திலும் கிறித்துவர்களால் அறிவுபூர்வமாகவும், ஆதார பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் “கிறித்துவம் இறைவனின் மார்க்கம்” என்பதை நிருபிக்க முடியாது என்பது இவர்களின் இஸ்லாத்திற்க்கெதிரான பொய்பிரசாரங்களிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.
பொது மேடையில் வாசிக்கும் தகுதி கூட இல்லாத பைபிள் மூலம் இஸ்லாத்தை தழுவும் கிறித்துவர்களை தடுக்க முடியாது என்பதை உணர்ந்துதான் முஸ்லீம்களை பார்த்து “பயங்கரவாதி” “பழமைவாதி” வெற்று கோஷம் போடுகின்றது.
அல்லாஹ்வின் கிருபையால் பிரிட்டனில் வாழும் கிறித்துவர்கள் பைபிளின் தரத்தை அறிந்து சத்திய மார்க்கமான இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். கேத்தரீன் என்ற கிறித்துவ பெண்மனி இஸ்லாத்தை ஏற்று தற்போது பிரிட்டன் இஸ்லாமிய அமைப்பிற்க்கு தலைவியாக உள்ளார். இவர்களை போன்ற பலர் கிறித்துவர்கள் மத்தியில் தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து பலரை கிறித்துவத்திலிருந்து விடுவித்து நேர்வழியான இஸ்லாத்தின் பக்கம் அழைத்துவருகின்றனர்
பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை தழுவிய சிலர் கருத்து தெரிவிக்கையில் …
பவுல் மார்ட்டின் : எனக்கு எனது நண்பர்கள் மூலம் குர்ஆன் அறிமுகமானது, குர்ஆனை படிக்கும் போது அதனுடைய அறிவியல் உண்மைகளை பார்த்து வியந்து போனேன், (குர்ஆன் இறை வேதம் என்பதை உணர்ந்து) இஸ்லாத்தை தழுவினேன்.
(குர்ஆன் குறித்த விவாததிற்க்கு வரமால் ஓடி ஒளியுன் சானின் (SAN) தந்திரம் தற்போது விளங்குகின்றது, லண்டனை சேர்ந்த இந்த “பவுல் மார்ட்டின்” போல் கிறித்துவர்கள் குர் னின் அறிவியல் அற்புதங்களை பார்த்து ஆயிரகணக்கில் இஸ்லாத்தை தழுவிவிடுவார்கள் என பயந்து போய் தந்திரங்கள் செய்து தப்பிக்க நினைகின்றது சான்(SAN)).
டென்னிஸ் ஹார்ஸலி : நான் ஒரு கிறித்துவர், கத்தோலிக்க பள்ளியில் படிதேன், நண்பர்கள் மூலம் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, பின்பு நான் குர்ஆனை படிக்கும் போது ஏசு, மேரி, தோரா பற்றிய பல்வேறு உண்மையான தகவல்கள் குர்ஆனில் இருந்தது. எனவே கிறித்துவத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை ஏற்பது இயற்க்கையானது என கருதுகின்றேன் (அதாவது நீங்கள் உண்மையாக ஏசுவை நம்புவதாக இருந்தால், மேரியை மதிப்பாதாக இருந்தால், தோராவை நம்புவதாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்றுகொள்வதுதான் உண்மையான நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும்)
கதீஜா ரியோபுக் : நான் கிறித்துவ குடும்பத்தில் பிறந்தவள், என் குழந்தையுடன் வார வாரம் சர்ச்சிற்க்கு செல்வேன், இஸ்லாத்தில் இணைந்ததும் கிடைத்த அமைதி சர்ச்சில் கிடைக்கவில்லை, ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த எனது தாயால் நான் இஸ்லாத்தை ஏற்றதை ஜீரனித்து கொள்ளமுடியவில்லை, நான் இப்போது ஹிஜாப் அணிகின்றேன், நோன்பு வைக்கின்றேன், வாழ்வில் அமைதியை உணர்கின்றேன்
ஹனா தஜீமா : நான் பல மதங்களை ஆய்வு செய்தேன், குர்ஆன் அறிவு பூர்வமாக இருந்தது, பெண்களுக்கு உரிமையை தருவாதக இருந்தது எனவே ஆழ்ந்த மத பற்றுள்ள எனது குடும்பத்திலிருந்து நான் இஸ்லாத்தை தழுவினேன்
இது கிறித்துவத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய சிலரின் கருத்துக்கள், பின்பற்றுவதற்க்கு பைபிளில் ஒன்றும் இல்லை (புரக்கணிப்பதற்க்கு நிறைய உள்ளது), எனவே இந்த மக்களுக்கு உண்மைய எடுத்து சொன்னால் இஸ்லாத்தை ஏற்க்க கோடிகணக்கான கிறித்துவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயாராக இருகின்றனர் இன்ஷா அல்லாஹ். நாம் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை இந்த கிறித்துவ மக்களுக்கு எடுத்து சொல்வதுதான் மீதமிருக்கும் வேலை
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர். (அல் குர்ஆன் 5: 83)
கிறித்துவ மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துவைக்கும் இந்த புனித பணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து செய்து கொண்டு இருகின்றது அல்லாஹ்வின் உதவியுடன் கிறித்துவ பாதிரிமர்களுடன் பல விவாதங்களை செய்து உண்மையை நிலை நாட்டியுள்ளது,
சான் (SAN) மட்டும் குர்ஆன் குறித்த விவாத்திற்க்கு வந்தால் குர்ஆனின் அற்புதங்களை கிறித்தவர்களுக்கு விளக்கி, பைபிளில் மிச்சம் மீதியுள்ள உலரள்களை தோலுரித்து காட்டி “குர்ஆன் தான் இறை வேதம்” என்பதை நிச்சயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அல்லாஹ்வின் உதவியுடன் நிருபித்து காட்டும் இன்ஷா அல்லாஹ்.
 Thanks:S.சித்தீக்.M.Tech
w


Friday 2 March 2012

  அல்குர்ஆனும், பிரபஞ்ச தோற்றத் தத்துவமும்.



பிரபஞ்சம் தோன்றியது எவ்வாறு?
எந்த ஒரு பொருளானாலும் அதற்கு ஒரு ஆரம்பமும், ஒரு முடிவும் இருப்பது நியதி. இது பொருட்களுக்கு மட்டுமல்லாது உயிரினங்களுக்கும் உள்ள பொதுவான நியதி. இவ்வனைத்தின் உருவாக்கத்திற்கும் படைப்பாளன் ஒருவன் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும். அப் படைப்பாளனுக்கு தொடக்கமும், முடிவும் இருக்கவே கூடாது. அப்படி இருந்தால் படைப்பாளனுக்கு படைப்பாளன், படைப்பாளனுக்கு படைப்பாளன், படைப்பாளனுக்கு படைப்பாளன்……. என்ற அர்த்தமில்லாத முடிவிலி ஆன ஒரு சங்கிலித் தொடர் ஏற்படும்.

எனவே, இதிலிருந்து நிச்சயமாக ஒரு படைப்பாளன் இருக்கின்றான் என்று எந்தவித சந்தேகமும் இன்றி புலனாகின்றது.

இப்பொழுது அவனை எவ்வாறு அறிந்து கொள்வது என்ற கேள்வி நம்மில் எழும். படைப்பாளனுக்கு மட்டும் தான் அவனது படைப்பினங்களைப் பற்றியும், அதன் உருவாக்கங்கள் பற்றியும், அப் படைப்பினங்களின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கும், எவ்வாறு இருக்க வேண்டும் என்ற முழு அறிவும் இருக்கும். அவன் இவ்வுலகிற்கு தன் படைப்பினங்கள் பற்றியும், அதன் உருவாக்கம், செயற்பாடுகள் பற்றியும் தெளிவுபடுத்தினால் நம்மால் நிச்சயமாக நம்மையும், அண்டங்கள் அனைத்தையும் படைத்த இறைவன் இவன் தான் என்று எந்தவித மறுப்பும் இன்றி தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

அல்குர்ஆன் படைப்பாளனைப் பற்றி என்ன கூறுகின்றது?
முஸ்லிம்களால் இறைவேதம் என்று நம்பப்படும் அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் அண்டங்கள் அனைத்தையும் படைத்த படைப்பாளனாகிய இறைவன் தன் படைப்பினங்களைப் பற்றியும், அதன் உருவாக்கம் பற்றியும், அதன் செயற்பாடுகள் பற்றியும் மிகத் தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக பேசுகின்றான்.

அல்லாஹ்வே முதலில் படைத்தான். மீண்டும் அவன் படைப்பான். பின்னர் அவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (அல்குர்ஆன் 30:11)

அல்லாஹ் தான் ஒன்றுமே இல்லாதிருந்த நிலையில் இப் பிரபஞ்சத்தை படைத்தவன் என்பது இந்த குர்ஆன் வசனத்திலிருந்து தெளிவாகின்றது. அல்லாஹ் இப் பிரபஞ்சத்தின் ஆரம்பத்தை குர்ஆனில் குறிப்பிடும்போது,

(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து ”ஆகு' என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும். (அல்குர்ஆன் 2:117)

இந்த குர்ஆன் வசனத்திலிருந்து அல்லாஹ் வானங்களையும், பூமியையும் எந்தவித முன்மாதிரி இன்றி படைத்ததாக குறிப்பிடுகின்றான். மனிதனால் சுற்றுப்புறச் சூழலை அறிந்து கொள்வதன் மூலம் வெறும் கருதுகோள்களையும், கோட்பாடுகளையும் மாத்திரமே உருவாக்க முடியும்.
வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்ததாக படைப்பாளனாகிய அல்லாஹ் திருமறைக் குர்ஆனிலே குறிப்பிடுகின்றான்.

”பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான்'' என்று கூறுவீராக!

நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.
பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். ”விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்'' என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். ”விரும்பியே கட்டுப்பட்டோம்'' என்று அவை கூறின.

இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும். (அல்குர்ஆன் 41: 9,10,11,12)

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.(அல்குர்ஆன் 7:54)

வானங்கள், பூமி மட்டுமல்லாது அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவைகளையும் சேர்த்து ஆறு நாட்களில் படைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக்களைப்பும் ஏற்படவில்லை. (அல்குர்ஆன் 50:38)

அல்குர்ஆன் வசனங்களின் படி பூமியைப் படைக்க இரு நாட்கள், அதில் மனிதன் வாழத் தேவையான ஏற்பாடுகள் செய்ய இரண்டு நாட்கள், வானங்களைப் படைக்க இரு நாட்கள் என ஆறு நாட்களில் அனைத்தையும் அல்லாஹ் படைத்தான். கீழுள்ள அல்குர்ஆன் வசனங்களும் இதற்கு ஆதாரமாக உள்ளன.
(அல்குர்ஆன் 10:3, 11:7, 41:9, 10, 41:12, 25:59, 32:4, 57:4)

பிரபஞ்சம் தானாக உருவாகியதா?
சில விஞ்ஞானிகள் இப் பிரபஞ்சம் தானாக உருவாகியது என்ற கோட்பாட்டில் உள்ளனர். மேலும், கடவுள் என்று ஒருவன் இல்லை என்றும் இப் பிரபஞ்சத்தின் எல்லா நிகழ்வுகளும் இயற்கையின் நிமித்தமே நிகழ்கின்றது என்றும் வாதிடுகின்றனர்.

அல்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு ஏராளமான இறை வசனங்கள் சான்று பகர்கின்றன. அல்குர்ஆனிலுள்ள அறிவியல் வசனங்களை தற்போதைய விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் உண்மைப்படுத்தி அல்குர்ஆன் இறைவேதம் தான் எனவும் இறைவன் ஒருவன் இருக்கின்றான் எனவும் எந்தவித சந்தேகமும் இன்றி தெளிவாக எடுத்தியம்புகின்றன.
அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காகப் பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 41:53)

எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது அவர்களே படைக்கக் கூடியவர்களா?

அல்லது வானங்களையும், பூமியையும் அவர்களே படைத்தார்களா? அவ்வாறில்லை! அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள். (அல்குர்ஆன் 52: 35,36)

படைத்த இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கு அல்குர்ஆனில் நிறைய அறிவியல் சான்றுகள் காணப்படுகின்றன. இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் அச் சான்றுகள்
உண்மைபடுத்துகின்றன. அவற்றில் நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளான இப் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய பெரு வெடிப்புக் கொள்கை (Big bang theory) பற்றியும், விரிவடையும் பிரபஞ்சம் பற்றியும் அல்குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பே அறிவிக்கின்றது.

அல்குர்ஆன் இப் பிரபஞ்சத்தின் தோற்றம், விரிவு பற்றி என்ன கூறுகின்றது?
.பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். ”விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்'' என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். ”விரும்பியே கட்டுப்பட்டோம்'' என்று அவை கூறின. (அல்குர்ஆன் 41:11)

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)

மேலுள்ள அல்குர்ஆன் வசனங்களின் படி வானங்கள், பூமி முன்னர் ஒரே பொருளாக இணைந்திருந்தன எனவும் அவை பிரிக்கப்படுவதற்கு முன் புகை மண்டலமாக இருந்து அதைத் தொடர்ந்து வானங்கள், பூமி, கோள்கள் உருவாக்கப்பட்டன என்றும் கூறப்படுகின்றது.

(நமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம். (அல்குர்ஆன் 51:47)

அல்குர்ஆன் இப் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி மட்டும் கூறாமல் அது விரிவாகிக்கொண்டே செல்கின்றது என்ற உண்மையையும் 1400 வருடங்களுக்கு முன்பே அறிவித்து விட்டது.

விஞ்ஞானம் இப் பிரபஞ்சத்தின் தோற்றம், விரிவு பற்றி என்ன கூறுகின்றது?
நவீன விஞ்ஞான அறிக்கைகளின் படி இப் பிரபஞ்சம் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒரு கட்டத்தில் இப் பிரபஞ்சமானது வெறும் புகை மண்டலமாகக் காணப்பட்டது. அதாவது இப் புகை மண்டலமானது ஓளி ஊடுருவ முடியாத, அடர்த்தியான வெப்ப வாயுக் கலவையாகும். இது விஞ்ஞானத்தின் பிரபஞ்சத்தின் பிறப்பு பற்றிய மறுக்க முடியாத உறுதியான நம்பிக்கையாகும். தற்போது விஞ்ஞானிகளின் அவதானிப்பின் படி மீதமுள்ள புகை மண்டலத்தின் மூலம் புதிய நட்சத்திரங்கள் உருவாகின்றன.
பூமியினதும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள், பால்வெளிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வானத்தினதும் உருவாக்கத்திற்கு புகை மண்டலமே காரணம் எனவும் மேலும், இவை எல்லாம் ஒன்றாக ஒரு பொருளாக இருந்து வெடித்து சிதறி புகை மண்டலமாகி ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டு உருவாகின என்று நவீன விஞ்ஞானம் கூறுகின்றது.

Dr. Alfred Kroner என்பவர் புகழ்பெற்ற புவியியலாளர்களில் ஒருவர் இவர் புவியியற் துறை பேராசிரியரும், ஜேர்மனியில் உள்ள புவியியற் துறை நிறுவனத்தின் தலைவரும் ஆவார். இவர் கருத்து தெரிவிக்கையில் “முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இப் பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. காரணம், விஞ்ஞானிகள் கடந்த காலங்களில் தான் இதனை மிகவும் முன்னேறிய தொழில் நுட்ப உதவியுடன் கண்டறிந்தனர்”. மேலும் அவர் தெரிவிக்கையில் “1400 வருடங்களுக்கு முன்னர் அணு இயற்பியல் பற்றி சிறிதளவேனும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தைப் பொருத்தவரை இது அவரது சொந்த கருத்தாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. உதாரணமாக வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆரம்பம் பற்றிய அறிவு எந்த மனிதனுக்கும் அறவே இல்லாத காலம் அது”. என்று கூறுகின்றார்.

மேலதிய தகவல்களுக்கு கீழுள்ள வீடியோவைப் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=kdrphWOTVb4&feature=player_embedded

California Mount Wilson ஐச் சேர்ந்த அமெரிக்க வான சாஸ்திரியான Edwin Hubble என்பவர் 1929ம் ஆண்டில்
வானியல் வரலாற்றில் சிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தவர். அவரது கண்டுபிடிப்புகளில் ‘பிரபஞ்சத்தின் விரிவடைதல்’ மிக பிரபல்யமான ஒன்று.

இவர் மிகப் பெரிய தொலைநோக்கி மூலம் வானத்தை அவதானிக்கையில் நட்சத்திரங்களும், பால்வெளிகளும் நம்மிலிருந்து மட்டும் விலகிச் செல்லாமல் அவை தனக்குத் தானே ஒவ்வொன்றிலிருந்தும் விலகிச் செல்வதை அவதானித்தார்.

 இதிலிருந்து அவர் பெற்ற முடிவு இப் பிரபஞ்சத்தின் அனைத்திலுமுள்ள அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்வதால் இப் பிரபஞ்சமானது தொடர்ந்து விரிவடைந்து கொண்டே செல்கின்றது.

இப் பிரபஞ்சம் விரிவடைதலைக் குறிப்பாக சொல்வதானால் ஒருவர் நேரத்தை நோக்கி பின்னோக்கியதாக நகர்ந்தால் அவர் இந்த பிரபஞ்சம் ஒற்றைப் புள்ளியில் (single point) உருவாக்கப்பட்டதை உணர்வார். கணக்கெடுப்புகளின் படி இந்த ஒற்றைப் புள்ளியானது இப் பிரபஞ்சத்திலுள்ள அத்தனை அம்சங்களினதும் பூஜ்ஜியத் தொகுதியையும் (zero volume)> முடிவிலா அடர்த்தியையும் (infinite desity) உள்ளடக்கி உள்ளது.

இப் பிரபஞ்சம் ஆனது இப் பூஜ்ஜயத் தொகுதியின் ஒற்றைப் புள்ளியிலிருந்து வெடிப்புக்குள்ளாகி தோன்றியது. இப் பிரபஞ்சத்தின் ஆரம்பத்திற்கான இம் மாபெரும் வெடிப்பானது ‘Big Bang’ எனும் பெரு வெடிப்புக் கொள்கையாக விஞ்ஞானிகளால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விளக்க நோக்கங்களுக்காகவே இத் தத்துவார்த்த வெளிப்பாடானது பூஜ்ஜியத் தொகுதி என்று அழைக்கப்படுகின்றது. அதாவது விஞ்ஞானத்தில் இந் நிலை மனித அறிவுக்கு ஒன்றும் இல்லாத நிலை (Nothingness) என்பதற்காகவே பூஜ்ஜயத் தொகுதி என்று அழைக்கப்படுகின்றது.

‘Big Bang’ பெரு வெடிப்புக் கொள்கையின் படி பிரபஞ்சமானது ஒரு பொருளிலிருந்து வெடிப்புக்குள்ளாகி பல பொருட்கள் உருவாகின என்பதாகும். இக் கொள்கை 20ம் நூற்றாண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அல்குர்ஆன் இதை 1400 வருடங்களுக்கு முன்பே அறிவித்து விட்டது. அல்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு இந்த சான்று ஒன்றே போதுமானது.

 Written by:பாத்திமா ஷஹானா (கொழும்பு)

Thanks:http://rasminmisc.blogspot.in/

Wednesday 29 February 2012

தக்லீத் ஓர் ஆய்வு.

பி.ஜெ யை பின்பற்றுவதும் வழிகேடே!



தக்லீத் ஓர் ஆய்வு என்ற தொடர் ஆக்கத்தில் இது வரைக்கும் சில முக்கிய பகுதிகளைப் பற்றி தெளிவாக ஆராய்ந்தோம். இதன் இறுதித் தொடராக தவ்ஹீத் ஜமாத்தைப் பற்றி வைக்கப்படும் மிக முக்கிய விமர்சனமான “பி.ஜெ தக்லீத்” தொடர்பாக நாம் ஆராய இருக்கின்றோம்.

ஆம் குர்ஆன், சுன்னா என்று பேசுபவர்களாக இருந்தாலோ அல்லது அதற்கு மாற்றமானவர்களாக இருந்தாலோ அனைவராலும் நம்மைப் பார்த்து வைக்கப்படும் விமர்சனங்களில் இது முக்கிய விமர்சனமாகும்.



இவர்கள் குர்ஆன், சுன்னா என்று பேசினாலும் பி.ஜெ எதைச் சொன்னாலும் அதையும் ஏற்று பின்பற்றுவார்கள். அவர் எதைச் சொல்கிறாரோ அதுதான் மார்க்கத்தின் தீர்ப்பு என்று இவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். என்பதுதான் நமக்கு எதிராக மற்றவர்கள் வைக்கும் முக்கியமான விமர்சனம்.



இந்த விமர்சனத்திற்கு பதில் சொல்வதற்காகத் தான் ஆய்வின் இறுதிப் பகுதியை “பி.ஜெ யைப் பின்பற்றுவதும் வழிகேடே!“ என்று தலைப்பிட்டு எழுதுகின்றோம்.



இந்தத் தலைப்பை ஆய்வு செய்வதற்கு முன் பி.ஜெ பற்றிய சில செய்திகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். வெறுமனே விமர்சனத்திற்கு மட்டும் பதில் சொல்வதைவிட விமர்சனத்துடன் தொடர்புடையவர் யார்? அவரை வைத்து ஏன் இந்த விமர்சனத்தை செய்கிறார்கள் என்பது அனைவரும் தெரிய வேண்டும் என்பதற்காக பி.ஜெ பற்றிய சில செய்திகளை ஆரம்பமாக நாம் பார்த்து விட்டு விமர்சனத்திற்குறிய பதிலை பார்க்களாம்.

யார் இந்த பி.ஜெ?

பி.ஜெ என்ற அடைமொழி மூலம் அறியப்பட்டுள்ள பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத பல சகோதரர்களுக்கு மத்தியில் ஒரு பேச்சாளராக மட்டுமல்லாமல், எழுத்தாளராகவும், சிறந்த சமூக சேவகராகவும் அறியப்பட்டிருக்கிறார்.

இந்தியாவின் தமிழ்நாட்டில், தொண்டி என்ற ஊரில் பிறந்த இவர், இஸ்லாமிய மார்க்த்தைத் தெளிவாக கற்று ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகி அதன் மூலம் பிரச்சாரக் களத்தில் தனக்கென ஒரு தனியிடத்தை மக்கள் மத்தியில் பெற்றுக் கொண்டுள்ளார்.

1980 காலப் பகுதியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் மன்றத்தில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் புறப்பட்ட இவருடைய பிரச்சார வாழ்க்கையில் இதுவரைக்கும் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக ஆயிரக் கணக்கான உரைகள் நிகழ்த்தியுள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், திருமறைக் குர்ஆனை எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதத்தில் மொழி பெயர்த்தது மட்டுமன்றி அதற்கு அழகிய முறையில் விளக்கவுரையும் எழுதியுள்ளார்

.மார்க்கப் பிரச்சாரம் மாத்திரம் தான் தங்கள் வேலை என்றெண்ணிக் கொண்டிருக்கும் பல மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் சமுதாயத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் ஆலிம்கள் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் முன்னெடுப்புக்களிலும் தன்னை இவர் ஈடுபடுத்திக் கொண்டார்.

ஆலிம்கள் என்றால் இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதுவதும், நபியின் பிறந்த நாள் (?) விழா என்ற பெயரில் மவ்லிது என்ற அரபிப் பாடலை ஒதுவதும், ஐந்து நேரம் தொழுகை நடத்துவதும் தான் என்பதைத் தாண்டி, சமுதாயப் போராட்டத்தில் ஆலிம்கள் தங்களை ஈடுபடுத்தி நமது சமுதாயத்தின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று குரல் எழுப்புபவராக இவர் இருந்து வருகின்றார்.

ஏகத்துவப் பிரச்சாரத்தில் பி.ஜெயின் பங்களிப்பு.

அல்லாஹ்வை வணங்க வேண்டிய சமுதாயம், அவ்லியாக்கள் (?) என்று மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டவர்களை வணங்கி வழிபட்டு வந்ததைப் பார்த்து அதற்கெதிராக இஸ்லாத்தின் உண்மை நிலையை மக்கள் மத்தியல் எடுத்துரைக்க வேண்டும் என்று ஏகத்துவப் பிரச்சாரத்தை 1980களில் தமிழகத்தில் இவர் ஆரம்பித்தார்.

கப்ரு வணக்கத்திற்கெதிராக குரல் கொடுத்த காரணத்தினால் பல இடங்களில் தாக்கப்பட்டு, அல்லாஹ்வின் உதவியினால் உயிர் பிழைத்தார்.

உயிரே போனாலும் கொள்கையை சொல்லாமல் விட மாட்டேன் என்ற கொள்கை உறுதியினால் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் இவருடைய பிரச்சாரம் சூடு பிடித்தது.

தமிழகத்தின் பல இளைஞர்கள் இவருக்குப் பின்னால் அணி வகுத்தார்கள்.

நவீன தாக்கத்தை உண்டாக்கிய “நஜாத்” பத்திரிக்கை.

ஏகத்துவப் பிரச்சாரத்தை எழுத்து மூலமும் எத்தி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துபையில் பணியாற்றும் தமிழ் கூறும் சகோதரர்களினால் நட்த்தப்பட்ட ஐ ஏ சி (இஸ்லாமிய விழிப்புணர்வு மையம்) என்ற அமைப்பின் சார்பில் “நஜாத்” என்ற பெயரில் ஒரு பத்திரிக்கை இவரை ஆசிரியராகக் கொண்டு துவங்கப்பட்ட்து. அது வரை காலமும் பேச்சாளராக மாத்திரமே அறியப்பட்ட பி.ஜெ நஜாத் பத்திரிக்கை மூலம் எழுத்தாளராகவும் அறிமுகமானார்.

ஆம் ஒவ்வொரு செய்தியையும் மிக அழகிய முறையில் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் விதமாக பேசும் இவர் எழுத்திலும் அதே முறையைக் கையாண்டார்.

கப்ரு வணக்கத்திற்கு எதிரான இவருடைய எழுத்துக்கள் “நஜாத்” பத்திரிக்கை மூலமாக தமிழகத்தின் மூலை முடுக்குகளையும் தாண்டி வெளிநாடுகளிலும் தடம் பதிக்க ஆரம்பித்தது.

மத்திய கிழக்கில் வேலை வாய்ப்புக்காக சென்றிருந்த மக்கள் மத்தியில் பி.ஜெ அவர்களின் பேச்சுக்களும் எழுத்துக்களும் அபார தாக்கத்தையே உண்டாக்கியது எனலாம்.

சினிமாவில் மூழ்கி, மரணித்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டிருந்த முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் இவருடைய பேச்சின் மூலமும், எழுத்தின் மூலம் இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்ற முனைந்தனர்.


இன்றைக்கு இவரையும் இவர் சார்ந்திருக்கும் ஜமாத்தையும் எதிர்க்கும் பலரும் அன்றைக்கு இவருடைய கருத்துக்களின் தாக்கத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றால் அது மிகையல்ல. (இவருடன் இருந்த பலர் இவரை விட்டும் விலகிச் சென்றதற்கான காரணத்தை இறுதியில் விளக்குவோம்).


நடிகர்களுக்கு பால்அபிஷேகம் நடத்திய முஸ்லிம் இளைஞர்கள் “நஜாத்” பத்திரிக்கையின் வாசகர்களாக மாறினார்கள். ஏகத்துவக் கருத்துக்களை மற்றவர்களுக்கு பரப்புவது மட்டுமன்றி குர்ஆனை ஆழமாக படிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் இந்தப் பத்திரிக்கை உண்டாக்கியது.

இன்றைக்கும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தவ்ஹீத் வாதிகளை “நஜாத் காரர்கள்” என்று அழைக்கும் வழக்கம் இருந்து வருகின்றது. காரணம் நஜாத் பத்திரிக்கை தான்.

ஆனால் ஐ ஏ சி அமைப்பின் மூலமும், அதன் பொருளாதாரத்தின் மூலமும் உருவாக்கப்பட்ட நஜாத் பத்திர்கையை உள்ளூரில் நிர்வாகம் செய்து வந்த அபூஅப்துல்லா என்பவர் தன்னுடைய சொந்த உரிமையாக பதிவு செய்து கொண்ட்தால் ஐ ஏ சிக்கு ஆதரவாக, நியாயத்துக்கு ஆதரவாக நஜாத் பத்திரிகையில் இருந்து விலகினார். அத்துடன் நஜாத் பத்திரிகை இருந்த இடம் தெரியாமல் போனது தனி விஷயம்.

புரட்சியை உண்டாக்கிய புரட்சி மின்னல்.

இதன் பின்னர் மதுரையில் இருந்து நீண்ட காலமாக அப்துல்லா என்பவர் புரட்சி மின்னல் என்ற பெயரில் ஒரு பத்திரிகையை நடத்தி வந்தார் அவர் ஐ ஏ சி யைத் தொடர்பு கொண்டு இந்தப் பத்திரிகையை நீங்கள் நட்த்துங்கள் என்று கூறி ஒப்படைத்தார். அந்தப் பத்திரிகையில் பீஜே தொடர்ந்து எழுதி வந்தார்.

அறிவுக் கண்களைத் திறந்த அல்ஜன்னத்.

இவருடைய எழுத்துத் துறையின் இன்னொரு பரிணாமமாக உருவானதுதான் “அல்ஜன்னத்” பத்திரிக்கை. ஆன்மீகம் மட்டுமல்லாமல் அரசியில் கருத்துக்களையும் இதன் மூலம் பி.ஜெ முன்வைத்தார்.

பொது சிவில் சட்டம், இந்திய அரசியில் சாசனம் தொடர்பான விளக்கங்கள், குறைகள், பாதிக்கப்படும் சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்கள் தங்கள் உரிமையை வென்றெடுப்பதற்காக சட்ட ரீதியிலான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை இதன் மூலம் இவர் தெளிவுபடுத்தினார்.

ஷாஃபி, ஹனபி என்று ஆளுக்கு ஒரு இமாமை பிடித்துக் கொண்டு மத்ஹபுகள் என்ற வழி கெட்ட சிந்தனையில் இருந்தவர்களிடம் மத்தபுகளின் ஆபாசங்களையும், அசிங்கங்களையும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தியது மாத்திரமன்றி, ஹதீஸ்கள் என்ற பெயரில் போலியாக மக்களிடம் புகுத்தப்பட்டிருந்த செய்திகளையும் தெளிவுபடுத்திக் காட்டுவதற்குறிய சிறந்த ஊடகமாக அல்ஜன்னத்தை இவர் பயன்படுத்தினார்.

இயக்க ரீதியிலான கொள்கை முன்னெடுப்புக்கள்.

ஆரம்பம் முதல் பல இயக்கங்களில் இணைந்திருந்த இவர் குர்ஆனையும், ஸஹீஹான ஹதீஸ்களையும் மாத்திரம் யாருக்கும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் உடைத்து சொல்ல வேண்டும் என்பதற்காக ஜாக் என்ற ஒரு இயக்கத்தை உருவாக்கினார். அதன் தலைவராகவும் இருந்தார்.

பிரசாரப்பணியில் தீவிரமாக ஈடுபட தலமைப் பொறுப்பு தடையாக இருப்பதாக கூறி அந்த இயக்கத்தினர் விரும்பாத போதும் வலுக்கட்டாயமாக கமாலுத்தீன் மதனியை அதன் தலைவராக ஆக்கினார்.

சிரிது காலம் அதில் இருந்து பிரச்சாரத்தை முன்னெடுத்த இவர் மார்க்க ரீதியிலான சில பிரச்சினைகள் காரணமாகவும், அரசியல் ரீதியிலும் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், தமுமுக என்ற இயக்கத்தைச் சில சகோதரர்களுடன் சேர்த்து உருவாக்கினார்.

நேரடி அரசியலில் இணைந்து வெறும் வாக்கு வங்கி அரசியல் நடத்தும் இயக்கமாக இல்லாமலசமுதாயத்தின் நலன் காக்கும் இயக்கமாக தமுமுக இருக்க வேண்டும் என்பதற்காக எக்காரணம் கொண்டும் தேர்தலில் இறங்க மாட்டோம் என்ற ஒரு விதியையும் அமைப்பு விதியாக்கினார்.

ஏகத்துவ அறிஞர்களின் இடைவிடாத உழைப்பாலும் தீவிரமான பிரச்சாரத்தினாலும் இந்த இயக்கம் மக்களிடம் செல்வாக்கு பெற்றது.


பலதடைகளைத் தாண்டி இந்த இயக்கம் பெருவளர்ச்சி கண்ட பின்னர் இதன் அமைப்பாள பொறுப்பில் இருந்து விலகினார். திருக்குர் ஆன் தமிழாக்கம் செய்யும் பணியில் முழுமையாக ஈடுபடுபட வேண்டியுள்ளதால் விலகுவதாகவும் அறிவித்தார். அன்றைய தமுமுகவில் தலைவர் பொதுச் செயலாளர் பதவிகலை விட மேலான முதனமையான பதவி அமைப்பாளர் பதவியாகும்.


அதன் பின்னர் அந்த இயக்கத்தின் பணிகளில் இருந்து விலகிக் கொண்டாலும் அதன் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் பல ஆண்டுகள் இருந்தார். பொதுவாக ஒரு இயக்கத்தில் இருந்து விளகுவோர் அதற்கு எதிராக செயல்படுவது தான் வழக்கம். ஆனால் இவர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டாலும் அந்த இயக்கதில் இருந்து வந்தார்.


இதன் பின்னர் அவர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எஞ்சிய தவ்ஹீத்வாதிகளை வெளியேற்றினால் தான் சுன்னத் ஜமாஅத் ஆதரவும் கிடைக்கும். நாம் தேர்தலிலும் போட்டியிடலாம் என்று கருதி யாரும் தவ்ஹீத் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று முடிவு செய்தனர். இதைக் கண்ட பிறகு தான் தவ்ஹித் பிரச்சாரம் உங்களுக்குத் தடையாக இருக்குமானால்அதை எழுதி தாருங்கள் நாங்கள் விலகிக் கொள்கிறோம் என்று கூறினார். அந்த மதிகெட்டவர்கள் அப்படியே எழுதியும் கொடுத்தனர்.


தமுமுக வில் இருந்து இவருடன் சேர்த்து வெளியாகிய அனைத்து மார்க்க அறிஞர்களும் சேர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை தோற்றுவித்தார்கள்.


தவ்ஹீத் பிரச்சாரம் தான் நமது உயிர் மூச்சு என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு சமுதாய சேவையிலும் தனக்கென தனியிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தவ்ஹீத் பேசினால் மக்கள் வரமாட்டார்கள் என்ற இவர்களின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் கும்பகோனம் நகரில் பத்து லட்சம் முஸ்லிம்களைத் திரட்டி முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு போராட்டம் நடத்தினார். தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நடத்திய இந்த பேரணி இதற்கு முன் தமுமுக நடத்திய எல்லா போராட்டங்களை விடவும் பிரம்மாண்டமாக இருந்தது. அதன் பின்னர் தஞ்சை, சென்னை தீவுத்திடல் என நடத்தப்பட்ட இரண்டு மாநாடுகளும் கும்பகோனத்தையும் மிஞ்சும் வகையில் இருந்தன. ஆனால் தவ்ஹீத் பிரச்சாரம் தான் தமுமுக வளர்ச்சிக்கு தடை என்று கூறியவர்கள் பீஜே பிரிந்த பின்னர் ஒரு மாநில மாநாடையும் நடத்தவில்லை. நட்த்தினால் இரண்டையும் மக்கள் ஒப்பிட்டு பார்த்து தமுமுகவின் செல்வாக்கை விளங்கிக் கொள்வார்கள் என்று அஞ்சினார்கள்.


மாற்று மத அன்பர்களில் பலம் பெரும் இயக்கங்கள் எல்லாம் தமிழகத்தில் இருக்கும் போது, இரத்ததான சேவையில் மாநிலத்திலேயே முதல் இடத்தில் இவ்வமைப்பு தான் இருக்கிறது என்றால் அதன் சமுதாய சேவை முன்னெடுப்புக்களின் வீரியத்தை அறிந்து கொள்ளுங்கள்.

பி.ஜெ சந்தித்த விவாதக் களங்கள்.

ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக விவாதக் களங்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கப்ரு வணங்கிகள், கிருத்தவர்கள், காதியானிகள், கடவுள் இல்லை என்று வாதிடும் நாத்தீகர்கள், குர்ஆன் சுன்னா என்று தங்களையும் தவ்ஹீத் வாதிகளாக வாதிடுபவர்கள் என்று பலருடன் பல விவாதக் களங்களை சகோதரர் பி.ஜெ சந்தித்தார்.

முதன் முதலில் குமரி மாவட்டம் கோட்டாரில் கப்ரு வணங்கிகளுடன் விவாதம் நடந்தது. அதில் கேரளாவின் பெரிய ஆலிமாக கருதப்படும் அபூபக்கர் முஸ்லியார் உள்ளிட்ட பல பெருந்த்தலைக்கள் கேவலமான தோல்வியைத் தழுவினார்கள். அதன் பின்னர் குமரி மாவட்ட்த்தில் மாபெரும் ஏகத்துவ எழுச்சி ஏற்பட்ட்து. தமிழகம் முழுவதும் கப்ரு வணக்கத்தில் இருந்து மக்கள் விடுபட இந்த விவாதம் காரணமாக் இருந்த்து எனலாம்.

நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் இவ்வுலகுக்கு அனுப்பப்பட மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக இருக்க மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவனும் நபி தான் என்ற வழி கெட்ட கொள்கை கொண்ட காதியானிக் காபிர்களுடன் எதிர்த்து வாதிடுவதற்கு அனைவரும் பின்வாங்கிய நேரத்தில் இறைவனின் அருளினால் அவர்களுடன் பகிரங்க விவாதம் நடத்தி காதியானிகளின் குருட்டுக் கொள்கைக்கு சாவு மணி அடிக்க உதவினார்.


கஃபா நிலைக்குமா? என்ற தலைப்பில் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து வெளியிட்ட ஜெபமணி என்ற பாதிரியாருடன் மதுரையில் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் கிருத்தவம் தூய்மைத் தன்மையை இழந்து மனிதர்களின் சொந்தச் சரக்குகள் பைபிலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நிரூபித்து ஒரு விவாதத்தை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து இலங்கையில் கல்முனையில் மத்ஹப் வாதிகளுடன் நடந்த விவாதத்திலும் பங்கு கொண்டார்.


பின்னர் கொழும்பில் கப்ரு வணங்கிகளுடன் கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த மற்றொரு விவாதத்திலும் கலந்து கொண்டார்.

அதே போல் மவ்லிதுகளுக்கும், மதுகபுகளுக்கும் எதிராக கலியக்காவிளை என்ற இடத்தில் ததஜ சார்பாக மிகச் சிறப்பான ஒரு விவாதக் களத்தில் கலந்து கொண்டு சத்தியக் கொள்கையை நிலை நாட்ட பாடுபட்டார்.


ஒருவன் முஸ்லிம் என்று தன்னை சொல்லிக் கொண்டால் அவன் என்னிடம் வந்து பைஅத் – உறுதி மொழி தரவேண்டும் என்று வாதிட்டு பைஅத் செய்யாதவர்கள் அனைவரும் காபிர்கள் என்று குப்ர் பட்டம் சூட்டிய இலங்கை உமர் அலி என்பவருடன் இலங்கை புத்தளம் நகர மண்டபத்தில் பகிரங்க விவாதம் ஒன்றை நடத்தியதின் மூலம் உமர் அலியின் உளரல் மொழிகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவினார்.

அல்லாஹ் உருவமற்றவனா? அபத்தங்களும், ஆபாசங்களும். இமாம்களின் துணையின்றி குர்ஆனையும், சுன்னாவையும் விளங்க முடியாதா?, போன்ற தலைப்புகளில் கப்ரு வணக்கத்திற்கு வக்காலத்து வாங்கி மக்களை வழிகேட்டிற்கு அழைத்துக் கொண்டிருக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்பவருடன் சென்னையில் தொடர்ந்து நான்கு விவாதங்களை நடத்தினார்.

கடவுள் இல்லை எல்லாம் இயற்கை என்று வெற்றுக் கூச்சல் போடும் நாத்தீக திராவிட இயக்கத்தவர்களுடன் இறைவன் இருக்கிறான் என்பதை அழுத்தமாக பதிய வைக்க கடந்த ஆண்டு பகிரங்க விவாதக் களத்தில் அவர்களுடன் வாதிட்டார்.

இறுதியாக முஸ்லீம்களில் யாரும் என்னுடன் வாதிக்க வர மறுக்கிறார்கள். நான் சொல்லும் கிருத்தவ மதம் தான் உலகில் உண்மை மதம், என்று வெறிக் கூச்சல் போட்டுத் திரிந்த ஜெர்ரீ தோமஸ் என்ற கிருத்தவ பாதிரியாருடன் ததஜ சார்பாக கடந்த ஜனவரி மாதம் சென்னையில் பைபில் இறை வேதமா? என்ற தலைப்பில் ஒரு பகிரங்க விவாதத்தை நடத்தினார்.

இதன் விளைவாக இரண்டாவது தலைப்பான குர்ஆன் இறை வேதமா? என்ற தலைப்புக்கு வாதிக்க வராமலே ஓடினர் ஜெர்ரீ தோமஸ்.


இப்படி தனது 30 வருட கால பிரச்சாரக் களத்தில் பல விவாதக் களங்களையும் சந்தித்தார் சகோதரர் பி.ஜெ

இணைய தளத்திலும் இஸ்லாமியப் பிரச்சாரம்.

நவீன ஊடகங்களையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக www.onlinepj.com என்ற பெயரில் ஒரு இணையதளத்தை ஆரம்பித்து தூய பிரச்சாரத்தை செய்து வருகின்றார்.

தான் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் இலவசமாக வாசகர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இணையதளத்தில் வெளியிட்டார்.





தனது திருக்குர்ஆன் மொழியாக்கம் மற்றும் விளக்கவுரை, ஆயிரக்கணக்கான வீடியோ, ஆடியோ உரைகள், கட்டுரைகள், கேள்வி பதில் தொகுப்புக்கள், சர்சைக்குரிய சட்டங்களுக்கு ஆய்வு ரீதியிலான பதில்கள், குடும்பவியல் தொடர்பான தெளிவான விளக்கங்கள் என இணையதளம் மூலமான தனது பிரச்சாரத்தையும் செவ்வெனே செய்து வருகின்றார்.

இப்படி பலவிதமாக பிரச்சாரங்கள் இவர் செய்து வந்தாலும் இவருடன் பிரச்சாரக் களத்தில் ஆரம்ப காலத்தில் இணைந்திருந்த சிலர் ததஜ வில் இருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட பின்னர் இவரைப் பற்றி பலவிதமான விமர்சனங்களையும் இவர்கள் செய்து வருகின்றார்கள்.

காரணம் அவர்கள் அனைவரும் தாமாக அமைப்பை விட்டு போனவர்கள் அல்ல குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்கள். தங்கள் சுயலாபத்திற்காக இயக்கத்தைப் பயன்படுத்தியவர்கள் இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டவுடன் தாங்கள் தூய்மையானவர்கள் என்பதை நிரூபிக்க முடியாத காரணத்தினால் இவர் மீது அபாண்டமாக செய்திகளைப் பரப்பி வருகிறார்கள் என்பதே நிதர்சனம்.

பி.ஜெ யைப் பின்பற்றலாமா?

ஏகத்துவப் பிரச்சாரத்திற்காக பல தியாகங்களை செய்து தனது வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்காகவே இவர் அர்பணித்தார் என்பதில் நமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.


ஆனால் இவருடைய கருத்துக்களை கண்மூடிப் பின்பற்றுவதற்கு தக்லீத் – தனிமனித வழிபாடு நடத்துவதற்கு மார்க்கத்தில் எவ்வித அனுமதியும் கிடையாது.

............................................................................................................

பி.ஜெ சொன்னால் அனைத்தும் சரியாகத் தான் இருக்கும்.

அவர் தவறாக சொல்ல மாட்டார்.

அவரில்லாவிட்டால் தவ்ஹீத் பிரச்சாரம் கேள்விக் குறியாகிவிடும்.

இவருடைய ஆய்வுகள், கருத்துக்களில் தவரே இல்லை

என்று யாராவது வாதிட்டால் அவர் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரையில் அல்லாஹ்வை இறைவனாக ஒத்துக் கொண்ட ஒவ்வொரு மனிதனும் அவனுடைய இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும்.

எந்த ஒரு மார்க்க விஷயமாக இருந்தாலும் அல்லாஹ் சொல்லியுள்ளானா? நபியவர்கள் காட்டித் தந்தார்களா? என்று தான் பார்க்க வேண்டுமே தவிர பி.ஜெ சொல்லிவிட்டார் என்று பின்பற்றுவதற்கு எவ்வித அனுமதியும் இல்லை. பி.ஜெ ஒரு செய்தியைச் சொன்னாலும் அதை அல்லாஹ் சொன்னானா? நபியவர்கள் சொன்னார்களா? என்று ஆய்வு செய்துதான் பின்பற்ற வேண்டும்.


ஏன் என்றால் அவரும் சாதாரண மனிதர் தான் தன்னுடைய ஆய்வின் படி சரியானதாக தான் நினைக்கும் கருத்தை அவர் வெளியிடுகின்றார். குறிப்பிட்ட கருத்து தவறானது என்று யாராவது ஆதாரத்துடன் சுட்டிக் காட்டும் போது அதனை அவர் மாற்றிக் கொள்கின்றார். இதுவே இவரின் கருத்தில் சரியும் இருக்கும் தவறும் வரும் என்பதற்கான ஆதாரமாகும்.


பி.ஜெ அவர்கள் ஆரம்ப காலத்தில் தான் வெளியிட்ட பல கருத்துக்களை அவை தவறானவை என்று சுட்டிக் காட்டப்பட்டவுடன் திருத்தியிருக்கிறார்.

பி.ஜெ ஆரம்பத்தில் சொன்ன கருத்துக்களில் பின்னர் மாற்றிக் கொண்ட சில கருத்துக்கள்....

உதாரணத்திற்கு பி.ஜெ ஆரம்ப காலத்தில் பிரச்சாரம் செய்தவற்றில் தற்போது மாற்றிக் கொண்ட சிலவற்றை இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.

ஏகத்துவக் கொள்கையை யாருக்கும் வளைந்து கொடுக்காமல் உடைத்துச் சொன்னார் அந்த அடிப்படைக் கொள்கையில் அவரிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆயினும் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறுகள் ஏற்பட்டு அதை சுட்டிக் காட்டும் போது அவ்வப்போது பகிரங்கமாகச் ஒத்துக் கொண்டு திருத்திக் கொண்டிருக்கிறார்.

இவரை விடப் பல மடங்கு அறிவும், ஆற்றலும் மிக்க எத்தனையோ அறிஞர்கள், ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறாக முடிவு செய்து பின்னர் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த நிலை ஏற்படாத எந்த அறிஞரும் உலகத்தில் ஒரு காலத்திலும் இருந்ததில்லை.

இதற்கான காரணம்..

அறிவிப்பாளர் குறித்த விமர்சனங்கள் அடங்கிய அனைத்து நூல்களும் கிடைக்கப் பெறாமை.
பொதுவாக மனிதரிடம் காணப்படும் மறதி, கவனமின்மை.
ஒருவரைப் பற்றி செய்த விமர்சனத்தை அதே பெயருடைய மற்றவருக்குப் பொருத்தி விடுதல்.

இந்தத் துறையில் விற்பன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் செய்த விமர்சனங்களில் பெரும்பாலும் தவறு ஏற்படாது என்று எண்ணி அப்படியே அவர்களின் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளுதல்.


இது போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன.


தவ்ஹீத் ஜமாஅத் மூத்த அறிஞர்களைப் பொறுத்த வரை அவர்கள் அனைவருமே மத்ஹபை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கூடங்களில் தான் கற்றனர். அவர்கள் கற்ற கல்விக் கூடங்களில் ஹதீஸ் கலை குறித்து முறையாகக் கற்பிக்கப்படாததால் அந்தக் கலையைக் கூட சுய முயற்சியால் கற்கும் நிலையில் இருந்தனர்.

இதன் காரணமாகத் தான் துவக்க காலங்களில் சில ஹதீஸ்கள் குறித்து நிலை மாற்றம் ஏற்பட்டது.

தற்போது ஹதீஸ் கலை தொடர்பான அனைத்து நூல்களும் திரட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் தாம் பேசிய, எழுதிய, அங்கீகரித்த ஹதீஸ்களில் பலவீனமானவை உள்ளனவா? என்பதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஏற்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த காலங்களில் ஒரு ஹதீஸை ஸஹீஹ் என்று கருதியதால் அதன் அடிப்படையில் சில சட்டங்களைக் கூறினார்கள். பின்னர் அவை பலவீனம் எனத் தெரிய வரும் போது முன்பு பலவீனமான ஹதீஸின் அடிப்படையில் கூறிய சட்டத்தை தவறு என்று தெளிவுபடுத்தினார்கள்.

பெரும்பாலான மக்கள் அதனை அறிந்திருந்தாலும் இன்னும் அதிகமானவர்கள் தவ்ஹீத் ஜமாத் உலமாக்கள் முன்னர் சரி என்று கூறி, பின்னர் தவறு என்று மாற்றியவற்றை அறியாமல் இருக்கின்றனர். எனவே அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கத்தில் அவற்றை பத்திரிக்கைகளிலும் சிடி க்களாகவும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஏற்கனவே ஒரு கருத்தைச் சொல்லிவிட்டால் அது தவறு என்று தெரிந்த பின்னர் அதில் பிடிவாதமாக இருப்பதும் பொருந்தாத காரணம் கூறி உண்மையை மறைப்பதும் இறையச்சத்திற்கு எதிரானதாகும்.

மறுமையைப் பற்றிய அச்சம் இல்லாமல் குரோதப் புத்தி கொண்ட சில குறுமதியாளர்கள் இளக்காரம் செய்வார்கள் என்றாலும் தம் கவுரவத்தை விட மார்க்கம் முக்கியமானது என்ற அடிப்படையில் இதைத் தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.


பெண்கள் கப்ர் ஸியாரத் செய்யலாமா?


பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வது கூடாது என்பது தான் முதலில் பி.ஜெ மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாக இருந்தது. அதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக எடுத்து வைக்கப்பட்டது.

கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களையும் அதை வணங்குமிடமாகவும் விளக்கு ஏற்றுமிடமாகவும் ஆக்கும் பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல்: திர்மிதீ (294), நஸயீ (2016), அபூதாவூத் (2817), அஹ்மத் (1926, 2472, 2829, 2952)

இச்செய்தியில் பாதாம் என்ற அபூஸாலிஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.


பின்வரும் ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் கப்ரு ஜியாரத் செல்வதற்குத் தடையில்லை என்பதே சரியானதாகும்.

மரண பயத்தையும் மறுமைச் சிந்தனையையும் வரவழைத்துக் கொள்வதற்காக பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்வதற்கு அனுமதியுள்ளது. மண்ணறைகளுக்குச் செல்பவர்கள் ஓத வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

நான் ''அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹூல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹூ பி(க்)கும் ல லாஹிகூன்'' என்று சொல்'' என்றார்கள்.

(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்று விட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக் கூடியவர்களாக உள்ளோம்.)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (1774)

நபியவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு கப்ரு ஜியாரத்தின் போது ஓத வேண்டிய துஆவைக் கற்றுக் கொடுத்ததின் மூலம் பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வதில் தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

"அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1777)

"அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதுவிற்கு அவரின் தாயாருடைய அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளைச் சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: திர்மிதி (974)

மண்ணறைகளை ஸியாரத் செய்கிறோம் என்று கூறிக் கொண்டு சில பெண்கள் தர்ஹாக்களுக்குச் செல்கிறார்கள். தர்ஹாக்களில் இணை வைப்பு அரங்கேற்றப்படுவதாலும் மார்க்கம் தடை செய்த ஏராளமான அம்சங்கள் அங்கு நடைபெறுவதாலும் அங்கு ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் செல்வது கூடாது. பொது மையவாடிகளுக்குச் செல்லலாம். என்பதே மறு ஆய்வின் தெளிவான முடிவாகும்.

நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ.

நபி (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் போது "தஹபள்ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்'' என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.

(பொருள்: தாகம் தணிந்தது. நரம்புகள் நனைந்தது. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும்)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: அபூதாபூத் 2010, ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ

இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று கூறி பி.ஜெ தனது உரைகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் இதைத் தெரிவித்திருந்தார்.

இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்து அறிவிக்கும் ஹூஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்.

ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.

மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் பி.ஜெ யும் இதனை வழிமொழிந்தார்.

இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஏற்பார்.


பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.

ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம் பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று பி.ஜெயும் பிரச்சாரம் செய்தார்.

மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.

ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரிய வந்தது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை.

ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம் நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான் அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது தெரிய வந்தது.

மேலும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா? என்று ஆய்வு செய்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.


இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ அவர்கள் மட்டும், "இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார்' என்று குறிப்பிடுகின்றார்.

இப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார்.

இப்னு ஹிப்பான் அவர்களின் இந்த விதிமுறையை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர்.

வேறு எந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை.

எனவே யாரென்று அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல.

இதன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை என்பது உறுதியாகின்றது.

சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376) நபிமொழிக்கேற்ப நோன்பு துறக்கும் போதும் "பிஸ்மில்லாஹ்' கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும் என்று தனது மறு ஆய்வில் இதனைத் தெளிவு படுத்தினார்.

வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதலாமா?
வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்பதே ஆரம்ப கால நிலைப்பாடாக இருந்தது. இதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாக எடத்து வைத்தார்.

ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீது (ரலி), நூல்: ஹாகிம் (3392)

ஆனால் மேற்கண்ட செய்தி ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இது நபியவர்கள் கூறியது கிடையாது. அபூ ஸயீத் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்று (மவ்கூஃப்) என்பதே சரியானதாகும் என ஹாபிழ் இப்னு ஹஜர் உட்பட பல்வேறு அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓத வேண்டும் என்று வருகின்ற அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும்.

கஹ்ஃப் அத்தியாயத்திற்குப் பொதுவாக சில சிறப்புகளைக் குறிப்பிட்டு சில ஸஹீஹான ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன.

ஆனால் வெள்ளிக்கிழமை கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை என்பதே சரியானதாகும். என்று தனது மறு ஆய்வின் முடிவில் ஏற்கனவே தான் சொன்னதை மாற்றி அறிவித்தார் பி.ஜெ

நடுவிரலில் மோதிரம் அணியலாமா?

நடுவிரலிலும் அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்ற நிலைப்பாட்டைத் தான் ஆரம்பம் முதல் பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் அது குறித்த ஹதீஸை மறு ஆய்வு செய்த போது இந்த விரல்களில் மோதிரம் அணிவது தவறல்ல என்ற முடிவு எட்டப்பட்டது.

இதற்கு அடிப்படையாக முஸ்லிமில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.

நடுவிரலையும் அதை அடுத்துள்ள விரலையும் சுட்டிக்காட்டி இந்த விரலிலோ அல்லது இந்த விரலிலோ மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தடை செய்தார்கள் என்று அலீ (ரலி) கூறியதாக ஆஸிம் கூறினார்.

(முஸ்லிம் 3910)

இந்த ஹதீஸில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை. இரண்டு விரல்களில் மோதிரம் அணியக் கூடாது என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. இரண்டில் ஏதோ ஒரு விரலில் அணியக் கூடாது. அது எந்த விரல் என்பது தெரியவில்லை என்றே கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம் நூலில் இடம் பெற்ற மற்றொரு அறிவிப்பில் (ஹதீஸ் எண் 3910) "இரண்டில் எந்த விரல் என்பது ஆஸிமுக்குத் தெரியவில்லை' என்று கூறப்படுகிறது.

இதே செய்தி இப்னுமாஜாவில் வேறு விதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் (இப்னு மாஜா 3638) என்று இந்த அறிவிப்பில் கூறப்படுகிறது.

இரண்டையும் அலீ (ரலி) அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். இரண்டையும் அலீ (ரலி) வழியாக அபூபுர்தாவும் அவர் வழியாக ஆஸிமும் தான் அறிவிக்கிறார்கள்.

அதாவது ஒரே செய்தி நான்கு விரல்களில் மோதிரம் அணிவதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதியாக அறிவிக்கப்படுவதையே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சந்தேகத்துக்கு இடமான சொற்களைக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது.

எனவே குறிப்பிட்ட விரலில் மோதிரம் அணியக் கூடாது என்பதை உறுதியாக அறிவிக்கும் ஹதீஸ் இல்லாததால் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்பதே சரியானதாகும். என்ற முடிவுக்கு வந்தார்.

இப்படி தான் ஆரம்பத்தில் சொன்ன பல கருத்துக்கள் தவறு என்று சுட்டிக் காட்டப்பட்டவுடன் இவரால் திருத்தப்பட்டுள்ளது.

TNTJ மற்றும் SLTJ பிரச்சாரகர்கள் பி.ஜெ யைப் பின்பற்றுகின்றார்களா?


நிலைமை இப்படியிருக்க பி.ஜெயுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யும் பிர உலமாக்கள் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் அனைவரும் பி.ஜெ சொன்னால் சரி என்று ஏற்றுக் கொள்கிறார்கள். பி.ஜெ அவர்களை தக்லீத் செய்கிறார்கள் என்ற வாதம் அண்மைக் காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் பி.ஜெ அவர்கள் தற்போது திருத்திக் கொண்டுள்ள பல விஷயங்கள் மற்ற உலமாக்களினால் சுட்டிக் காட்டப்பட்டதுதான் என்பதை ஏனோ இவர்கள் புரிய மறுக்கின்றார்கள்.

ஒருவரை கண்மூடிப் பின்பற்றுபவர்கள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கின்றது?

தவ்ஹீத் ஜமாத் அறிஞர்களோ பல விஷயங்களை தாம் ஆய்வு செய்து மற்ற உலமாக்களுடன் அதைப் பற்றிய வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கிறார்களே!

பி.ஜெயின் ஆய்வுக்கு மாற்றமாக கருத்துக் சொல்லி அதைப் பி.ஜெ அவர்களே ஏற்றுக் கொண்டு திருத்திய விஷயஙகள் பல இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் பொய்யையும், அவதூரையும் மாத்திரம் தங்கள் பிரச்சாரமாக இவர்கள் செய்வதற்குக் காரணம் இந்த ஜமாத்துக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரைக் கொடுக்க வேண்டும் என்ற அடிமட்ட சிந்தனை ஒன்று தானே தவிர வேறில்லை.

தவ்ஹீத் ஜமாஅத்தில் நிர்வாக விஷயங்களிலும் மார்க்க விஷயங்களிலும் ஒருவரைக் கண்மூடி பின்பற்றும் நிலை இல்லை. நிர்வாகம் சம்பந்தமாக ஒரு முடிவை எடுப்பதாக இருந்தால் கூட சக நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து அனைவரின் ஒப்புதலுடனே முடிவெடுக்கப்படுகின்றது.

தலைமை நிர்வாகத்தில் மட்டுமின்றி செயற்குழு, பொதுக்குழு ஆகியவற்றிலும் ஜமாஅத் உறுப்பினர்களின் கருத்தைப் பிரதிபலிக்கக்கூடிய ஜமாஅத்தாகவே தவ்ஹீத் ஜமாஅத் உள்ளது. இந்த ஜமாஅத்தில் தனிமனித வழிபாடு இருந்தால் இது போன்று கூட்டங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை.

தனிமனிதனை வழிபடக்கூடியவர்களிடம் கருத்து வேறுபாடே வராது. ஏனென்றால் அவர்கள் ஒரு மனிதனுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள். அவன் சொல்வதற்கு மாற்றமாகப் பேசமாட்டார்கள்.

ஆனால் நம்முடைய ஜமாஅத்தில் மார்க்க விஷயங்களில் நமது அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகின்றது. அனைவரும் கூடி ஆராயந்த பிறகு ஒரு சுமூகமான முடிவு எடுக்கப்படுகின்றது.

ஒருவர் கூறும் கருத்து தவறாக இருந்தால் அதை மற்றவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தவறான கருத்தைக் கூறியவர் அதைத் திருத்திக் கொள்கிறார். தக்லீத் செய்யக் கூடியவர்களிடம் இது போன்ற பண்புகளைப் பார்க்க முடியாது.

நிர்வாக விஷயத்திலும், மார்க்க விஷயத்திலும் யாரையும் தக்லீத் செய்யாத ஜமாத்தாக தவ்ஹீத் ஜமாத் மாத்திரமே இருப்பதை நியாயமாக சிந்திப்பவர்கள் உணர முடியும்.

இப்படிப்பட்ட ஜமாஅத்தைப் பார்த்து தக்லீத் செய்யக் கூடியவர்கள் என்று சிலர் கூறுகிறார்கள் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கின்றது.

தவ்ஹீத் நிலைபாடுகளை அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் முறியடிக்க திராணி அற்றவர்களே இந்த விமர்சனத்தைக் கையில் எடுக்கின்றனர். இவ்வாறு கூறினால் மக்கள் இந்த ஜமாஅத்தைப் புறக்கணிப்பார்கள் என்பதற்காக நம்மிடம் இல்லாத இந்தக் குற்றத்தை நம்மீது சுமத்தப் பார்க்கிறார்கள்.

ஆனால் நம்முடைய ஜமாஅத்தின் செயல்பாடுகளும், நிலைபாடுகளும் பொதுமக்களுக்கு வெளிப்படையானவை. இதைப் பார்க்கும் யாரும் இவர்களுடைய இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை உண்மை என்று நம்ப மாட்டார்கள்.

அண்ணன் சொன்னால் இவர்கள் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வார்கள் என்ற வாதம் தவறானது என்பதற்கு இன்னும் சில ஆதாரங்களை பார்ப்போம்.


பி.ஜெ யை தவ்ஹீத் ஜமாத் உலமாக்கள் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு எதிராக பி.ஜெ அவர்களுக்கு முன்னிலையிலேயே ஜமாத்தின் மூத்த உறுப்பினர் எம்.ஐ சுலைமான் அவர்கள் ஆற்றியை உரையைக் கேளுங்கள்.

அண்ணன் சொன்னால் மார்க்கமா?
http://www.youtube.com/watch?v=4TjmgzcX15k&feature=player_embedded


ஸக்காத் பற்றிய ஆய்வின் ஆரம்பம் எது?

தவ்ஹீத் ஜமாத் உலமாக்கள் பி.ஜெ யைத் தான் பின்பற்றுகிறார்கள் என்று அவதூறு பரப்புபவர்கள் ஸக்காத் விஷயத்தில் தவ்ஹீத் ஜமாத்தின் ஆய்வைத் தான் பெரிதாக எடுத்துப் பேசுவார்கள்.

ஆம் ஒரு பொருளுக்கு வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒரு முறை கொடுத்தால் போதுமா? என்று ஆய்வு செய்தால் ஒரு பொருளுக்கு ஒரு முறை தான் ஸக்காத் கொடுக்க வேண்டும். வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவையாக இருக்கிறது.

அதனால் கொடுத்த பொருளுக்கே வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்று சொல்வது தவறு என்ற முடிவை தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டது. இந்த முடிவை ததஜ வெளியிட்ட நேரத்தில் பலரும் பலவிதமான விமர்சனங்களையும் முன்வைக்க ஆரம்பித்தார்கள்.

அதிலும் குறிப்பாக பி.ஜெ அவர்கள் இது தொடர்பான ஒரு விவாதத்தை மதுரையில் நடத்தினார்கள் அப்போது பி.ஜெ சொல்வதைத் தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று தவ்ஹீத் ஜமாத்தின் மற்ற பிரச்சாரகர்களைப் பற்றி சிலர் விமர்சித்தார்கள் இன்றும் விமர்சிக்கின்றார்கள்.

இவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் ஸக்காத் விஷயத்தில் இப்படியான ஒரு ஆய்வை முதலில் முன் வைத்தவர் பி.ஜெ அல்ல. எம்.ஐ சுலைமான் அவர்கள் தான் இந்தக் கருத்தை ஆரம்பத்தில் வைத்தார்கள். அப்போது எம்.ஐ சுலைமானின் கருத்துக்கு மாற்றமாக வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் சகோதர் பி.ஜெ அவர்கள். பின்னர் எம்.ஐ சுலைமான் சொல்வதுதான் சரியான ஆய்வு என்பதை விளங்கி அந்த நிலைபாட்டிற்கு வந்தார்.

இப்போது எம்.ஐ சுலைமானை பி.ஜெ தக்லீத் செய்கிறார் என்று இவர்கள் சொல்வார்களா? சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஸக்காத் ஆய்வு தொடர்பாக எம்.ஐ சுலைமான் அவர்களின் விளக்கத்தைப் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=bmpYLDJxqrc&feature=player_embedded

பி.ஜெ க்கும் தவ்ஹீத் ஜமாத் உலமாக்களுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு வருவதில்லையா?

தவ்ஹீத் ஜமாத்தின் உலமாக்களுக்கும் பி.ஜெ அவர்களுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடே வருவதில்லை. காரணம் அவர்கள் பி.ஜெ சொன்னால் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஒரு குருட்டு விமர்சனத்தையும் சிலர் செய்கிறார்கள்.

அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அடிப்படையான விஷயம் என்னவெனில். பெரும்பாலும் தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் யாரும் மார்க்க பிரச்சினைகளில் ஆளுக்கு ஒரு கருத்தை பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். மார்க்க ரீதியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டார் அனைவரும் ஒன்று கூடி ஆய்வு செய்து முடிவை வெளியிடுவார்கள். அதனால் வெளியில் பிரச்சாரம் செய்யும் போது அனைவரும் ஒரே கருத்தை சொல்வதினால் பி.ஜெ யைப் பின்பற்றுகிறார்கள் என்று வாதிட முனைவது. வடிகட்டிய முட்டால் தனமாகும்.

மேற்கண்ட விமர்சனம் ஒன்றும் புதிதாக கிளம்பியது அல்ல. தமுமுக வை விட்டு தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் பிரிந்து வந்த நேரமே இந்த விமர்சனம் ஆரம்பித்து விட்டது.

பி.ஜெ அவர்களுக்கும் மற்ற பிரச்சாரகர்களுக்கும் மத்தியில் எவ்வித கருத்து வேறுபாடும் வராத அளவுக்கு அத்தனை பேரையும் பி.ஜெ மிரட்டி வைத்திருக்கிறார் என்றொரு குற்றச் சாட்டை அப்போதே தமுமுக வின் சார்பாக ஜவாஹிருல்லாஹ் வைக்கும் போது அதற்கு எம்.ஐ. சுலைமான் அவர்கள் பதில் கொடுத்தார்கள்.

அதில் தனக்கும் பி.ஜெ அவர்களுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடுகளை பட்டியலிட்டு தெளிவுபடுத்தினார் எம்.ஐ. சுலைமான் அவர்கள்.


பி.ஜெ அவர்களுக்கும் தவ்ஹீத் ஜமாத் அறிஞர்களுக்கும் மத்தியில் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றது. அப்படியான நேரங்களில் எல்லாம் அனைவரும் ஒன்று கூடி ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இதுதான் ஜமாத்தின் வளர்சிக்கு பெரும் துணையாக இருக்கும் ஒரு விஷயம்.


பி.ஜெ யின் குர்ஆன் மொழியாக்கமும், ததஜ உலமாக்களின் பங்களிப்பும்.

அதே போல் சகோ. பி.ஜெ யின் குர்ஆன் மொழியாக்கத்தை விமர்சிப்பவர்கள் பி.ஜெ அவர்கள் தன்னிச்சையாக அதனை மொழியாக்கம் செய்த்தைப் போலவும், அவருடைய மொழியாக்கத்தை அனைத்து உலமாக்களும் அப்படியே நம்பியதைப் போலவும் எழுதியும், பேசியும் வருகின்றார்கள். ஆனால் பி.ஜெ அவர்கள் திருமறைக் குர்ஆன் மொழியாக்கத்தை வெளியிடுவதற்கு முன் ஜமாத்தின் மற்ற பிரச்சாரகர்கள் அதனை சரி பார்த்து திருத்தங்கள் செய்த்தன் பின்னர் தான் வெளியிட்டார் என்பதே உண்மையாகும்.

குர்ஆன் மொழியாக்கத்தின் முதல் பதிப்பிலேயே அதன் கடைசிப் பகுதியில் சரி பார்த்த உலமாக்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கும். இதைப் பார்த்த பின்பும் விமர்சிப்பவர்கள், காழ்ப்புணர்வின் காரணமாக விமர்சிக்கின்றார்களே தவிர சத்தியம் அவர்களிடம் இல்லை என்பது இதன் மூலம் இன்னும் நிரூபணமாகின்றது.

தக்லீத் பற்றி பி.ஜெ யின் கருத்துக்கள்.

உலகத்தில் யார் என்ன கருத்தை சொன்னாலும் அதனை குர்ஆன் மற்றம் ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் உரசிப் பார்த்துத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரம் செய்கின்றது.

அதே போல் பி.ஜெ அவர்கள் கூட பல இடங்களிலும் இந்தக் கருத்தை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத் தக்கது. தக்லீத் தொடர்பாக பி.ஜெ யிடம் பல சந்தர்ப்பங்களில் கேட்க்கப்பட்ட கேள்விகளையும் அதற்குறிய பதில்களையும் ஒரு தொகுப்பாக இங்கு தருகின்றோம்.

ஆய்வு செய்யாமல் பின்பற்றலாமா?

http://www.youtube.com/watch?v=Y_1MGcf-quw&feature=player_embedded

ஆய்வு செய்துதான் பின்பற்ற வேண்டும். தவ்ஹீத் ஜமாத் சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வது தவறு என்று பி.ஜெ யே சொல்லும் காட்சி.


பி.ஜெ சொன்னால் தான் சரியா?

நான் சொல்லும் செய்திகளை அனைத்தையும் தேடிப் பார்த்துக் கொள்ள வேண்டும். குர்ஆனில் இருக்கிறது என்று நான் சொன்னால் அதையும் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் சொன்னால் சரி என்று இருந்தால் நீங்கள் மத்ஹபுகளிலேயே இருந்திருக்களாம். அப்படி யாராவது நான் சொன்னால் சரி என்று நினைத்தால் அதற்கு நான் பொருப்பல்ல மறுமையில் அவர்களுக்கு எதிராக நான் பேசுவேன்.

http://www.youtube.com/watch?v=KXGQf1ZLZIM&feature=player_embedded


எந்த அறிஞரையும் கண்மூடிப் பின்பற்றக் கூடாது.


எந்த அறிஞரின் கருத்தையும் கண்மூடிப் பின்பற்றக் கூடாது. அவர்கள் சொல்வது குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் இருக்கின்றதா என்பதை பார்த்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னால் மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும்.

பி.ஜெ பயானை மட்டும் கேட்பது சரியா?

http://www.youtube.com/watch?v=Dy-2Qkg-LFY&feature=player_embedded


பி.ஜெ அல்லாத மற்ற அறிஞர்களின் பயான்களையும் கேட்க வேண்டும் அப்படி கேட்பதில் குர்ஆன் மற்றும் ஸஹீஹான செய்திகளை சொல்பவர்களின் உண்மையை உணர்ந்து மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
http://www.youtube.com/watch?v=esdeOQBTCUs&feature=player_embedded


பி.ஜெ க்குப் பின் தவ்ஹீத் ஜமாத் இருக்காதா?

http://www.youtube.com/watch?v=3WEbLlB4xHc&feature=player_embedded


பி.ஜெ இல்லாமலேயே 2 வருடங்களுக்கும் மேலாக ஜமாத்தின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுத்தான் இருக்கின்றது. பி.ஜெ இல்லாவிட்டாலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை நாம் சொல்ல முடியும் என்பதை ததஜ பிரச்சாரகர்கள் நிரூபித்துக் காட்டினார்கள் என்பதுதான் இதில் இருந்து தெரியவரும் முக்கிய விஷயம்.

தக்லீதுக்கு யார் பொருப்பு?

http://www.youtube.com/watch?v=ADq0BffMdKI&feature=player_embedded


நாம் ஒரு கருத்து சொன்னால் நமக்கு மாற்றமாக யாராவது சொல்லியிருந்தால் அதையும் சேர்த்து பார்த்து இரண்டில் எது சரி என்பதை ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் தக்லீத் செய்ததாக மாறிவிடும்.


பொது மக்களின் தெளிவும், குழப்ப நினைக்கும் உலமாக்களும்.

ஏகத்துவத்தின் அடிப்படையில் தெளிவான முறையில் முடிந்த வரை இஸ்லாத்தின் செயல்பாடுகளை எடுத்து நடக்கும் மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்று நினைக்கும் சில ஆலிம்கள் தான் தக்லீத் என்ற வாதத்தை கையில் எடுத்து அவதூறு பரப்புகிறார்கள். அதிலும் அவர்கள் சொல்லும் செய்திகளை பொது மேடையில் நிரூபிப்பதற்கு முடியாமல் அறைக்குள் இருந்து ஆட்டம் போடுவதையும். மேடையில் வந்து நிரூபிக்க அழைத்தால் ஓடி ஒழிவதையும் நாம் கண் முன் காணக் கிடைக்கிறது.

எது எப்படியோ ஏகத்துவத்தின் செய்திகளை வல்ல இறைவன் மிகத் தெளிவான முறையில் மக்கள் மத்தியில் எத்தி வைப்பதற்கு நமக்கு என்றும் துணையாக இருக்கிறான் என்ற எண்ணத்தில் நமது பயணத்தை தொடருவோம்.

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

Thanks:http://rasminmisc.blogspot.in/











Friday 24 February 2012

ஆட்டுக் குட்டியில் அல்லாஹ்!


கிரானைட் கல்லில் கிறிஸ்து!






முகநூல் போன்ற சமூக வலைத் தளங்கள் வாயிலாகவும், மின்னஞ்சல்கள் வாயிலாகவும் நமது முஸ்லிம் சகோதரர்களால் அதிகமாகப் பரப்பப்படுவது இந்த வகை பொய்கள்.

...

... மேகத்திலோ, ஆட்டுக்குட்டியிலோ அல்லது மரம், காய்கறி, பழங்கள் போன்றவற்றிலோ அல்லாஹ் என்ற வார்த்தை இருப்பது போன்ற புகைப்படம் பதியப்படும். உடனே அதற்கு ஆயிரக்கணக்கான சகோதர, சகோதரிகள், சுப்ஹானல்லாஹ் என்று கமென்ட் கொடுப்பதும், லைக் அடிப்பதுமாக அந்த போட்டோ அமர்க்களப்படும்.



மின்னல் வேகத்தில் அந்த போட்டோ பல லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்து விடும். இதைப் பதிபவர்களோ, பரப்புபவர்களோ அல்லது இதை நம்பி பாராட்டுபவர்களோ இது உண்மையாக இருக்குமா என்று ஆராய்வதுமில்லை. சிந்திப்பதும் இல்லை.



அற்புதங்கள் மட்டுமே மார்க்கம் என்று மூளைச் சலவை செய்யபட்டுள்ள பரேலவிகள், கப்ரு வணங்கிகள் இதில் அதிகமான பங்கு வகிக்கின்றனர். இது தான் இஸ்லாத்தை நிரூபிக்கும் வழிமுறை என்று அவர்கள் நினைக்கின்றனர். இதே அடிப்படையில் ஏசுவின் உருவத்தை கிறித்தவர்களும் பிள்ளையார் உருவத்தை இந்துக்களும் பரப்புகிறார்களே, அதனால் அந்த மதங்கள் உண்மையாகி விடுமா? என்று இவர்கள் சிந்திப்பதில்லை.



எனவே இதுபோன்ற புகைப்படங்களை உங்களது நண்பர்கள் யாராவது பதிந்தால் அல்லது பகிர்ந்தால் அல்லது அதைப் பாராட்டி விமர்சனம் செய்தால் அவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக இந்தக் கட்டுரையின் லிங்கைப் பதியுங்கள்.

Monday 28 November 2011

நிச்சயிக்கப்படும் திருமணங்கள். – இஸ்லாமியத் தீர்வு என்ன?



இப்படியிருக்கையில் நமது சமுதாயத்தினர் மத்தியில் திருமணம் பற்றிய சரியான விழிப்புனர்வோ, இஸ்லாத்தின் உண்மையான சட்ட திட்டங்களோ முறையாக சொல்லிக் கொடுக்கப்படாததினால் அல்லது அவர்கள் முறையாக கற்றுக் கொள்ளாததினால் வாழ்கைத் தேர்வு முறையில் பல தவறுகளை செய்கிறார்கள்.

நமது காலத்தில் பெரும்பாலும் எல்லா இடத்திலும் திருமணங்கள் பல நிச்சயிக்கப்பட்டு வருடக் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டுதான் நடத்தப்படுகின்றன. ஆனால் இது பற்றிய இஸ்லாமிய நிலைபாடு மிகத் தெளிவானதாகும். அதைப் பற்றியே கட்டுரை ஆராய்கிறது.

திருமணம் - தவிர்க்கக் கூடாத நடை முறை.

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் (24 : 32))

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் "இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள். (நூல் புகாரி (5066))

மேலும் திருணம் செய்துகொள்வது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். தனக்கு திருமணம் செய்துகொள்ள சக்தியிருந்தும் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அவர் தன்னைச் சார்ந்தவர் இல்லை என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். 

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், "(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், "நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் "நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, "இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று சொன்னார்கள். (நூல் - புகாரி 5063)

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம்.(அல்குர்ஆன் (13 : 38))

மேற்கண்ட நபி மொழிகளும், திருமறை வசனங்களும் திருமணம் என்பது யாரும் தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத ஒரு செயல்பாடாக இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளதை தெளிவாக உணர்த்துகின்றன. 

நிச்சயிக்கப்படும் திருமணங்களும், கொச்சைப்படுத்தப்படும் இஸ்லாமிய குடும்பவியலும்.

இன்று நமக்கு மத்தியில் நடத்தப்படுகின்ற பல திருமணங்கள் வருடக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு நிச்சயம் செய்யப்படுகிறது.

ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது அல்லது மாப்பிள்ளைக்கு பெண் பார்க்கும் போது திருமணத்திற்கான தேதியை ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் சில இடங்களில் ஐந்து வருடம் வரை தள்ளி வைத்து விடுவார்கள் கேட்டால் நாங்கள் பேசி வைத்திருக்கிறோம் என்பார்கள்.

திருமணத்திற்கு பிறகு தான் கணவன், மணைவி பந்தம்.

ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை' எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?'' என்று கேட்டார்கள். அவர், "என்னிடம் எதுவுமில்லை'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!'' என்று சொன்னார்கள். அவர், "என்னிடம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?'' என்று கேட்டார்கள். அவர், "இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன்'' என்று சொன்னார்கள். (புகாரி- 5141)

எனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும் அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். 

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30 : 21)

எனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும். 

ஆண், பெண் தனிமை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதே!

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) (முஸ்லிம் 2611)

தனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான். ஏனெனில் நேரில் தனியாக இருக்கும் போது பேசும் எல்லாப் பேசுக்களையும் தொலை பேசி உரையாடலும் பேச வழிவகுக்கும். எனவே தன்னுடன் மற்றொருவரை வைத்துக் கொண்டே தவிர எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் பேசக் கூடாது. திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரை அருகில் வைத்துக் கொள்ளச் சொல்வதற்குக் காரணம் எந்த வகையிலும் வரம்பு மீறிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.

இந்த வரம்பை மீறி சேர்ந்து ஊர் சுற்றுவது தனிமையில் இருப்பது, கணவன் மனைவிக்கிடையே மட்டும் பேசத்தக்கவைகளைப் பேசிக் கொள்வதற்கு எந்த விதமான அனுமதியும் இல்லை.

இதனால் பாரதூரமான் விளைவுகள் ஏற்படுவதையும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திரும்ணத்துக்கு முன்பே எல்லை மீறிவிட்டால் ஆண்களுக்கு இயல்பாகவே குடும்ப வாழ்வில் ஈடுபாடு குறைந்து விடும். இதனால் திருமணம் நின்று போய்விடும். அப்போது பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் உடலால் நெருங்காமல் தனியாக இருந்து பின்னர் திருமணம் தடை பட்டாலும் அதுவும் பெண்களைப் பாதிக்கும். ஏனெனில் எல்லாம் நடந்திருக்கும் என்று தான் மற்றவர்கள் நினைப்பார்கள்.

அல்லது மனதார விரும்பிய பெண் ஒழுக்கம் கெட்டவள் என்று தெரிய வரும் போது அல்லது சந்தேகம் ஏற்படும் போது அவன் அப்பெண்ணை மறுக்கலாம்.

 தனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்

தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  (நூல் : புகாரி 6612)

 நிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றது. இந்நேரங்களில் ஆணையும் பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைபிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.

அதேப் போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.

எனவே இந்த பிரச்சனைகளில் எல்லாம் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதா? என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா?  என்று பார்க்க வேண்டும்.

நிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டால் என்ற விமர்சனம் எழும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆண் தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசுவதை இன்றைய சமுதாயம் தவறாக நினைப்பதில்லை. இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை. 

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் இது நடை முறைப்படுத்தப்படுவதில்லை.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம். பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம். இதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது. 

பெண் பேசி வைக்கிறோம் என்ற பெயரில் நடக்கும் அனாச்சாரங்கள் குறைய வேண்டுமானால் நபியவர்களின் வழிகாட்டுதலைப் போல் பெண் பேசினால் திருமணத்தை செய்து விடுவதுதான் சிறந்த நடை முறையாகும். காலம் தாழ்த்தும் போது நாம் ஏற்கனவே சொன்னதைப் போன்ற அனைத்துப் பிரச்சினைகளும் ஏற்படுவது மட்டுமன்றி பெண் பிள்ளையும் அவள் தரப்பும் கடுமையான முறையில் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது. 

இறுதியாக…………………

அன்பின் இஸ்லாமிய சொந்தங்களே! இஸ்லாம் காட்டிய வழியில் நமது திருமணங்களை உடனுக்குடன் நாம் அமைத்துக் கொண்டால் நமது வாழ்வில் ஏற்படும் பல சிக்கள்களுக்கும் தீர்வாக அது அமைந்து விடும் என்பதை மனதில் நிறுத்தி இஸ்லாமியக் குடும்பவியலைச் சரியான முறையில் புரிந்து வாழ்ந்து இம்மை மறுமையில் வெற்றி பெருவோமாக!
 
Thanks: http://rasminmisc.blogspot.com